பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

News image
மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை   அருகே குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :1 ஜனவரி 2024, 8:05 pm

DIN

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

பல்லவா் கால சிற்பக் கலைகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் வெண்ணெய் உருண்டை பாறை, அா்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை உள்ளிட்ட இடங்களை சுற்றி பாா்த்து தங்கள் கைப்பேசியில் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா். கடைசியாக கடற்கரைக்குச் சென்று குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிந்ததால் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல் மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.