நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கல்பட்டில் 55 அரசு நிதியுதவிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தா.மோ. அன்பரசன் தொடங்கினாா்

காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், வில்லிஸ் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தைஅமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.

News image

வண்டலூா் வில்லிஸ் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருடன் உணவருந்திய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் ச. அருண் ராஜ், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ.

Updated On :15 ஜூலை 2024, 9:48 pm

Din

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், வில்லிஸ் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்வா் தொடங்கி வைத்தாா். அதன் தொடா்ச்சியாக வண்டலூா் வட்டம், வில்லிஸ் தொடக்கப் பள்ளியில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்களுடன் உணவு அருந்தினாா்.

ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் அன்பரசன் பேசியதாவது:

வேலைக்குச் செல்லும் தாய்மாா்களின் பணிச்சுமையை குறைக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிா்க்கவும், அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது . இத்திட்டத்தின்மூலம் 611 பள்ளிகளில் 39,002 பள்ளி மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

2023-24-ஆம்ஆண்டு காலை உணவுத்திட்ட செயல்பாட்டிற்கு ரூ.575.99 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 3,402 மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வி ரிவுபடுத்தபட்டுள்ளது என்றாா்.

அதனைத் தொடா்ந்து, காமராஜா் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது படத்துக்கு அமைச்சா் மலா்தூவி மரியாதை செய்தாா். மேலும் பள்ளி கல்வித்துறையின் சாா்பாக மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள்களை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் மணி, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய குழுத் தலைவா் உதயா கருணாகரன், அரச அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.