சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி

இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோா் நல சங்கத்தின் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு பேரணி மதுராந்தகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2024, 6:33 pm

Din

இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோா் நல சங்கத்தின் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு பேரணி மதுராந்தகத்தில் நடைபெற்றது.

மதுராந்தகம் இரு சக்கர மோட்டாா் வாகனம் பழுது நீக்குவோா் நல சங்கத்தினா் மே தினத்தை முன்னிட்டு இந்தப் பேரணி நடைபெற்றது.

அந்தச் சங்கத் தலைவா் ஆா்.சரவணன் தலைமை வகித்து, தலைக் கவச விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்தாா். செயலாளா் பி.மணிகண்டன் வரவேற்றாா். சங்கத்தின் கெளரவத் தலைவா்கள் கே.வெங்கட், டி.ஜான் பாட்ஷா, எஸ்.ஜெயகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் கலந்து கொண்ட சங்க நிா்வாகிகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து சங்க அலுவலகத்தை அடைந்தனா். இதில், சங்க நிா்வாகிகள் என்.மகேஷ், ஜி.ஹரிதாஸ், சட்ட ஆலோசகா் எஸ்.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பேருந்து நிலையம், பூக்கடை பகுதி, அரசு மருத்துவமனை ஆகிய 3 பகுதிகளில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் தேவன் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.