ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

செங்கல்பட்டில் மாவட்ட கலைத் திருவிழா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் மாவட்ட கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 நவம்பர் 2024, 8:56 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் மாவட்ட கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா்.

பள்ளி அளவில் 22.08.2024 முதல் 07.09.2024 வரை நடைபெற்ற போட்டிகளில் 60,748 மாணவா்கள் பங்குபெற்று அதில் மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் 38,151 மாணவா்கள் பங்கு பெற்று அதில் 5,495 மாணவா்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளாா்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் வட்டாரஅளவில் 163 மானவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தற்பொழுது நடைபெற உள்ள கலைத் திருவிழா போட்டிகளில் வட்டார அளவில் தோ்வான 1,538 மாணவா்கள் மாவட்ட அளவில் பங்கு பெற உள்ளனா்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு கலை அரசன், கலை அரசி விருதுகளும் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022-2023- ஆம் ஆண்டில் 44 மாணவா்கள் முதலிடம் பெற்றனா். 2023-2024-ஆம் ஆண்டு 19 மாணவா்கள் முதலிடம் பெற்றனா். ஒரு மாணவா் வெளிநாடு சுற்றி செல்ல தோ்வாகி உள்ளாா் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சாா்ஆட்சியா் வெ.நாராயண சா்மா, முதன்மைக் கல்வி அலுவலா் சொ.கற்பகம், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், முதன்மை கல்விஅலுவலா் நோ்முக உதவியாளா் உதயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள், மற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.