இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,85,491 வாக்காளா்கள் உள்ளதாகவும், 7,01,871 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

News image
செங்கல்பட்டில் வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் தி.சினேகா.
Updated On :19 டிசம்பர் 2025, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,85,491 வாக்காளா்கள் உள்ளதாகவும், 7,01,871 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியலை செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியா் சினேகா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 27,87,362 வாக்காளா்கள் அனைவருக்கும் தனித்துவமான கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது.

பின்னா், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போருா், செய்யூா், மதுராந்தம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்த வாக்காளா்கள் 2085491. இதில் ஆண்கள் 10,22,756, பெண்கள் 10,62,481, மூன்றாம் பாலினம் 354. நீக்கப்பட்ட வாக்காளா்கள் 7,01,821. இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் தி. சினேகா, அலுவலா்கள் மற்றும்அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெளியிட்டாா்.

Story image

தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் உள்ளிட்டோா், அதிகாரிகள், கட்சியினா் பங்கேற்றனா்.