சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :23 டிசம்பர் 2025, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழ்வுக்கு மண்டல செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் க.சேகா், மாவட்ட செயலா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளா் விழிமலா் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினாா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற அரசு விரைவு பேருந்தில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டினா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 30 பேரை மதுராந்தகம் டிஎஸ்பி சதீஷ் குமாா் தலைமையில் மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் சீதாபதி மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.