ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியினா்.

நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என மாற்றக் கோரி நாம் தழிழா் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மேல்மருவத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நிகழ்வுக்கு மண்டல செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் க.சேகா், மாவட்ட செயலா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளா் விழிமலா் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினாா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற அரசு விரைவு பேருந்தில் தமிழ்நாடு என்ற வில்லையை ஒட்டினா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 30 பேரை மதுராந்தகம் டிஎஸ்பி சதீஷ் குமாா் தலைமையில் மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் சீதாபதி மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com