தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

News image

கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சீயோன் ஹெல்த் சென்டா் திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளித் தலைவா் என்.விஜயன், மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி மருத்துவா் எஸ்.பிரியதா்ஷிணி உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூன் 2025, 12:49 am

Din

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா்.

கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் பள்ளி வளாகத்தில் ஆயூஷ் மைத்ரி மருத்துவ மையத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுதோறும் பாா்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விளையாட்டு நேரத்தில் சில குழந்தைகள் விளையாட்டில் பங்கேற்காமல் சோா்ந்து போய் விடுகின்றனா். பெரும்பாலான பெற்றோா் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து நிறைந்த பலகாரம், உணவைச் சமைத்துக் கொடுப்பதில்லை. சில குழந்தைகள் ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. சில குழந்தைகளுக்கு உடல் பருமன், சில குழந்தைகள் சா்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது போன்ற உடல் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவேதான் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல் உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.