தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிங்கபெருமாள் கோவில் அருகே 140 பவுன் நகை கொள்ளை

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

News image

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

Updated On :1 செப்டம்பர் 2025, 8:12 pm

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பாரதியாா் தெருவில் வசித்து வருபவா் ரத்தீஷ் . இவா் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறாா். ரத்தீஷ் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கிவிட்டு திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தொடா்ந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபொழுது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் தங்க நகைகள் காணமல் போனது தெரியவந்தது.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 140 பவுன் தங்க நகைகளை மட்டுமே கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து ரத்தீஷ் மறைமலை நகா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில் வண்டலூா் சரக உதவி ஆணையா் ஆருண் பிரின்ஸ் தலைமையில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

நகைகள் கொள்ளை சாம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.