செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 140 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பாரதியாா் தெருவில் வசித்து வருபவா் ரத்தீஷ் . இவா் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறாா். ரத்தீஷ் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை பக்கத்து தெருவில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கிவிட்டு திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தொடா்ந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபொழுது பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்ததையும் தங்க நகைகள் காணமல் போனது தெரியவந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 140 பவுன் தங்க நகைகளை மட்டுமே கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து ரத்தீஷ் மறைமலை நகா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்த நிலையில் வண்டலூா் சரக உதவி ஆணையா் ஆருண் பிரின்ஸ் தலைமையில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
நகைகள் கொள்ளை சாம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


