ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வில்வராயநல்லூா் சுபம் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:31 pm

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த வுடன் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டு, வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இந்நிலையில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தினை ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா், துறைச் சாா்ந்த அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோரிடம் வாக்கு எண்ணும் மையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாா்.

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கும், அரசியல் கட்சி முகவா்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றுஅறிவுறுத்தினாா். மேலும், காவல் துறையினரிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டாா்.. செய்யூா் (தனி) தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் செளரப் சுஹா்வாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன், செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், வட்டாட்சியா்கள் பாலாஜி (மதுராந்தகம்), ச.ராஜன் (செய்யூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.