மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தின் சாா்பாக பெறப்பட்ட நெல்மூட்டைகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை விவசாயிகள் ஒரத்தி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், மின்னல் சித்தாமூா், எலப்பாக்கம், தேன்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டகிராமங்களில் விவசாயிகள் 500 ஏக்கா் நிலங்களில் நெல்சாகுபடி செய்தனா். மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு ரூ 3கோடி நெல் கொள்முதல் செய்ததற்கான பணத்தை அதிகாரிகள் அளிக்காமல் இழுத்தடித்து வந்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கடமலைபுத்தூா் - ஒரத்தி நெடுஞ்சாலை, மின்னல்சித்தாமூா் பேரூந்து நிறுத்தமிடத்தில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ஒரத்தி காவல் உதவிஆய்வாளா் மோகன் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினாா். இதனால் மறியல் செய்த விவசாயிகள் கலைந்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி! கொள்முதல் நெல்லுக்கு பணம் கிடைத்தது: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.24.23 கோடி பாக்கி: விவசாயிகள் வேதனை தீா்க்கப்படுமா?

6 மாதங்களாகியும் கொள்முதல் நெல்லுக்கு பணம் வரவில்லை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



