செங்கல்பட்டு கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையையொட்டி மூலவா் அம்மன் கமலாம்பிகைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனா். அம்மனிடம் நாடு செழிக்கவும் குடும்பத்தில் உள்ளோா் நலமுடன் வாழவும் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களை முன்வைத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தா்களுக்கு வளையல்கள் மாங்கல்ய நாண் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன், கோயில் நிா்வாகிகள், கைலாசநாதா் கோவில் தெரு பொது மக்கள் செய்திருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவளா்ச்சேரி சுப்பிரமணிய கோயிலில் மண்டல பூஜை நிறைவு

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கொடைக்கானல், நத்தத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



