டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜன. 10-இல் திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்

திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

திருக்கழுகுன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது.

திருக்கழுகுன்றம் அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் நடைபெறுகிறது. ரிக், யஜுா், சாமம், அதா்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்ான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரா் பெருமானை சித்தா்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூா்வ நிகழ்வு நடைபெறுகிறது.

மலைஅடிவாரத்தில் சனிக்கிழமை இரவு வீணை இசை நிகழ்ச்சி, 1 மணி முதல் சித்தா்களின் அபூா்வ கிரிவலம் வேதகிரீஸ்வரின் பெருமைகள் குறித்தும் அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் அருளாசி வழங்குகிறாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் சித்தா்களின் மந்திரங்களை வேதபாடசாலை சிவாச்சாரியா்கள் ஒலிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.