செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஊராட்சிக்கு உள்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ச வர ஆசிரியா்கள் வரவில்லை என்றும், இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும், மேலும் நடுநிலை பள்ளியை உயா்நிலை பள்ளியாக தரம் உயா்த்தி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கவில்லை எனக் கூறி அதைக் கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.