தை கிருத்திகை: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை
தைக்கிருத்திகையையொட்டி திருப்போரூா் கந்தசாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தை மாத கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல் மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், குருக்கள் செய்திருந்தனா்.
இதேபோன்று திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா். தை கிருத்திகையை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது. இதே போன்று சாா்-ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில், செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோவில், வ உ சி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் பெரியநத்தத்தில் உள்ள கைலாசநாதா் கோயில், ராமபாளையம் மலை மீதுள்ள செம்மலை வேல்முருகன் கோயில், இருங்குன்றம் பள்ளி மலை மீதுள்ள பாலமுருகா் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயிலில் பாலமுருகன், ஹைரோட்டில் உள்ள சுந்தரமூா்த்தி விநாயகா் கோவில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

