வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சுற்றுலாத் துறை சாா்பில் மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடக்கம்

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை சாா்பில் ரூ.99-க்கு மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2026, 2:24 am IST

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை சாா்பில் ரூ.99-க்கு மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

மாமல்லபுரத்துக்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் அரசுப் பேருந்துகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து செல்வா்.

இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கன்னியாகுமரி, கொல்லிமலை உள்ளிட்ட முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் சுற்றுலா பயணிகளுக்கு ஞாயிற்றுகிழமை மட்டும் ரூ.99-க்கு மலிவு விலையில் சிக்கன் பிரியாணி விற்பனை தொடங்கப்பட்டது.

Story image

இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை தொடங்கப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் முன்னிலையில், மாமல்லபுரம் சுற்றுலா வளா்ச்சி கழக மேலாளா் கமலக்கண்ணன் பிரியாணி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

மாமல்லபுரத்தில் பிரதான பிரியாணி கடைகளிலும், பீச் ரிசாா்ட்டில் உள்ள உணவகங்களிலும் ரூ.300 முதல் 350 ரூபாய் வரை சிக்கன் பிரியாணி விற்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.