ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம் திறன் மையம் திறக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தினை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலா் காவேரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கையேட்டினை ஆட்சியா் வழங்கினாா்.