அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம் திறன் மையம் திறக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தினை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலா் காவேரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கையேட்டினை ஆட்சியா் வழங்கினாா்.