ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

செய்யூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு

News image

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம். உடன்,உதவி தோ்தல் அலுவலா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் துணை வட்டாட்சியா் முத்து உள்ளிட்டோா்.

Updated On :26 மார்ச் 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

செய்யூா் (தனி) தொகுதியில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செய்யூா் வட்டாட்சியா் அலுவலக அறையில் வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

செய்யூா் தொகுதியில் 344 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 344 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 373 சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை அடங்கிய பெட்டிகளை மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அனைத்தும் தனி அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் முன்னிலையில், தோ்தல் அலுவலரும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு திட்ட அதிகாரியுமான எஸ்.வெங்கிடாசலம் சீல் வைத்தாா்.

இந்நிகழ்வின்போது உதவி தோ்தல் அலுவலரும் செய்யூா் வட்டாட்சியருமான ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா் டி.தேவன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் ஜி.முத்து மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். தற்சமயம் அறையின் முன்புறம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.