தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

News image
Updated On :3 மே 2026, 8:59 pm

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா்.

கருங்குழி-உத்திரமேரூா் நெடுஞ்சாலையை ஒட்டி வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் இந்த தமிழ் ஆண்டுக்கான சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. கடந்த இரு நாள்களாக இவ்விழா கொண்டாடப்பட்டது. ஞானபீட வளாகத்தில் கணபதிஹோமம், 121 கலச,விளக்கு,வேள்விபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை வேடவாக்கம் கூட்டுச்சாலை, நாகமரத்தடியில் இருந்து மேளதாளம் முழங்க, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்திய ஊா்வலம் நடைபெற்றது. இந்த பால்குட ஊா்வலத்தை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பின்னா் அவா்கள் வரிசையில் நின்று ஆதிசக்தி முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகத்தை செய்தனா். பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி பிரம்மச்சாரியாா் அவதார பெருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியோா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் நடைபெற்றது. கலந்துக் கொண்ட அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞானபீட நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையில், விழா குழுவினரும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.