எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஏழை மாணவர்களின் கல்விக்கு கட்டணம் தடையாக இருக்கக் கூடாது: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்

சென்னை, ஜன. 8: ஏழை மாணவர்களின் கல்விக்கு, கட்டணம் தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.  சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் வெள்ளி விழாவில் அவர் சனிக்கிழமை ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சென்னை, ஜன. 8: ஏழை மாணவர்களின் கல்விக்கு, கட்டணம் தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

 சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் வெள்ளி விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது:

 தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் பாராட்டுக்குரியது. என்னைப் பொறுத்தவரை இத்திட்டம் மூலம் பள்ளிக் கல்வியில் போதிய தரத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த கல்வித் திட்டத்தை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

 பொதுவாக, தரமான கல்வி மலிவாகக் கிடைக்காது. எனினும், ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதில், கட்டணம் தடையாக இருக்கக் கூடாது.

 அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பள்ளிக் கல்வியை கற்பதற்கான நிலையை உறுதிப்படுத்துவது அவசியம்.

 இதேபோல பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறும் மாணவர்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதையும், இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

 முன்னதாக பள்ளியின் வெள்ளி விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார்.

 இதில், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:

 ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்கும் வகையில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை தொடங்கி வைத்தார் காமராஜர். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், அவர்களிடையே ஏற்றத் தாழ்வற்ற நிலையை உருவாக்க சீருடை திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்து கல்வி வளர்ச்சிக்கு அவர் அரும் பணியாற்றினார்.

 இதேபோல, சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியதன் மூலம் அண்ணாமலை செட்டியார் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் உயர் கல்வி பெற வழிவகுத்தார் என்றார் அமைச்சர் ஜி.கே. வாசன்.

 இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார், பள்ளியின் தாளாளர் குமார ராணி மீனா முத்தையா, முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் மண்டல அலுவலர் என். நாகராஜு, பள்ளி முதல்வர் எஸ். அமுதலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.