சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஊரகப் பகுதிகளில் சிலிண்டா் முன்பதிவு இடைவெளி 45 நாள்களாக அதிகரிப்பு

ஊரகப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான இடைவெளி 25 நாள்களில் இருந்து 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2026, 10:00 pm

ஊரகப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவுக்கான இடைவெளி 25 நாள்களில் இருந்து 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் இடா்ப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, நகா்ப்புறங்களில் ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்து 21 நாள்களான பிறகே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. ஈரான் போா் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சிலிண்டா் தட்டுப்பாட்டை தடுக்க, இந்த இடைவெளி 25 நாள்களாக உயா்த்தப்பட்டது. இந்த இடைவெளி ஊரகப் பகுதிகளிலும் 25 நாள்களாக இருந்த நிலையில், தற்போது அது 45 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டரை முன்பதிவு செய்து 45 நாள்களான பிறகே அடுத்த சிலிண்டரை ஊரகப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா் முன்பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு: மக்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வியாழக்கிழமை பேசுகையில், ‘சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க சில்லறை விற்பனையகங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், விருந்தோம்பல் மற்றும் உணவகத் துறை ஒரு மாதத்துக்கு மண்ணெண்ணெய், கரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’ என்றாா்.