ஆவடி - பட்டாபிராம் ஈஸ்ட் சைடிங் இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி வெள்ளிக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 43801: சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே பகல் 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அதிவிரைவு தண்டவாளப் பாதையில் இயக்கப்படவுள்ளது. இதன் காரணமாக வியாசர்பாடி ஜீவா, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அன்னனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.