அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னையின் சவால்கள் தெரியுமா?

சென்னையை மேம்படுத்துவதும் பராமரிப்பதும்தான் சவால்கள் என்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:10 pm

DIN

சென்னையை மேம்படுத்துவதும் பராமரிப்பதும்தான் சவால்கள் என்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் ''சென்னை ஓர் உலகளாவிய நகரம்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் ராம் வெங்கடரமணி தலைமை வகித்தார். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசியது:
சென்னை உலகளாவிய நகரம் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுவிட்டது. அதை மேம்படுத்தவும், பராமரிப்பதும்தான் நம்முன் உள்ள சவால்கள். தொழில், வர்த்தக சங்கங்கள் நகர்ப்புற வளர்ச்சிக்குப் பெரும் உதவிகரமாக உள்ளன. நகர்ப்புற வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக 
''2023 திட்டத்தில்'' நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நம் இலக்கை எளிதில் அடையலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான கல்வி நிலைய இயக்குநர் ஜெகன் ஷா, சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரா கீத்து, சென்னை தொழில், வர்த்தக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.சரஸ்வதி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.