வழிப்பறி: இரு சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்வோரிடம் தொடர்ச்சியாக வழிப்பறி நடைபெற்று வந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸார் விசாரணையில், தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பைச் சேர்ந்த ரா.அஜித்குமார் (20), பா.அருண்குமார் (20), ம.முத்து (21), சீ.பாலாஜி (20), இருசிறுவர்கள் என 6 பேர் வழிப்பறியில் ஈடுபடுவது தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு திருட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com