நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றைக் கடக்கும் மாணவர்கள்: கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆபத்தான முறையில் பரிசலில் மாணவர்கள் ஆற்றைக் கடப்பது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவை

Updated On :24 ஜனவரி 2019, 3:30 am IST


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆபத்தான முறையில் பரிசலில் மாணவர்கள் ஆற்றைக் கடப்பது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேட்டுப்பாளையத்தை சிறுமுகை அருகே உள்ளது லிங்காபுரம் கிராமம். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பில்லூர் அணை திறக்கப்பட்டதால் லிங்காபுரம் கிராமத்தில் உள்ள கரந்தையாற்றைக் கடக்க உதவும் பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் கரந்தையாற்றைக் கடக்கின்றனர். இதுதொடர்பான செய்தி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியானது.
தாமாக முன்வந்து வழக்கு: இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.