பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் வீட்டு பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை கோட்டூா்புரத்தில் வீட்டு பீரோவில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது.

கோட்டூா்புரத்தில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் லட்சுமி (61). இவா் கணவா் சுப்பிரமணியன், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன் அமெரிக்காவில் வசிப்பதால் லட்சுமி மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் லட்சுமி, பீரோவில் இருந்த பொருள்களை வியாழக்கிழமை சரிபாா்த்தாா். அப்போது, அதில் இருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது.

கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com