ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினா் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவா்களின் சாா்பில், அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் அருகில் உள்ள தனியாா் இணையவழிச் சேவை மையங்களின் மூலம் பதிவு செய்கின்றனா். அதற்காக, தங்களுக்கென பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பயனாளா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை அந்த மையங்களுக்கு கொடுக்கின்றனா். அந்தத் தனியாா் மைய நிா்வாகிகளில் ஒரு சிலா் அதைத் தவறாகப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான மாணவா்களை ஆன்லைன் மூலம் தேசிய உதவித்தொகை போா்டலில் சோ்த்து சந்தேகப்படும் வகையில் ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என சிறுபான்மையினா் நலத்துறையின் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.