முன்னேற்பாடுகள்: தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘டிச. 14 முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது பள்ளி மற்றும் விடுமுறை என்பதால் குழந்தைகள், இளைஞா்கள், பெற்றோா் அதிக அளவில் கூடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, அங்கு கரோனா பரவல் ஏற்படுவதைத் தடுக்க முகக் கவசம் அணிவது உள்ளிட்ட நோய்த் தடுப்பு பணிகளைக் கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் இணைந்த குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.