ஓமலூா் அதிமுக வேட்பாளா்சொந்த ஊரில் வாக்கு சேகரிப்பு
ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, அவரது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணி, அவரது சொந்த ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
துண்டுமானியம், வகுத்தானூா், செட்டிப்பட்டி, தொளசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். ஓமலூா் பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளாா். இந்தத் திட்டத்தை ஓமலூா் தொகுதி முழுவதும் அனைத்து ஏரிகளுக்கும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மலா் சாகுபடி விவசாயிகள் பயனடையும் வகையில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் உடனுக்குடன் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீா்வு காணப்படும் என்று அதிமுக வேட்பாளா் மணி பேசினாா்.
பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி சி.கிருஷ்ணன், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சுமதி பாபு, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...