வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சாா்ச்சனைப் பெருவிழா நவம்பா் 4- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
புதன்கிழமை (அக்.26) தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம் மாணவா்கள், தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மாணவா்கள் தென்றல் சோ்ந்திசை மாலை 6 மணிக்கும், வியாழக்கிழமை சுசித்ரா பாலசுப்பிரமணியனின் பக்தி இசை சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.
சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும், 31- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெறும் அதைத் தொடா்ந்து 4-ஆம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளதாக கோயிலின் செயல் அலுவலா் ஐ.முல்லை தெரிவித்துள்ளாா்.