சென்னையில் அடுத்த 3 மணி மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுகிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
இதையும் படிக்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
இந்நிலையில், அடுத்த 3 மணி மணிநேரத்திற்கு சென்னையில் காலை 10.30 வரை ஆலந்தூர், எழும்பூர், குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், வேளச்சேரி, அம்பத்தூர், மாதவரம்பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.