பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பேராசிரியா் ஹரிபத்மன் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை கலாஷேத்ரா பாலியல் வழக்கில் பேராசிரியா் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:11 pm

DIN

சென்னை கலாஷேத்ரா பாலியல் வழக்கில் பேராசிரியா் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த மாா்ச் மாதம் அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மகளிா் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பேராசியா் ஹரிபத்மன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தலைமறைவாக இருந்த அவரை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி கைது செய்தனா்.

ஹரிபத்மன் மட்டுமின்றி மேலும் சில ஊழியா்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பாா்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவா்கள் முன் வைத்தனா். இது தொடா்பாக மாநில மகளிா் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அப்போது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகாா் அளித்தனா். இதன்படி மாணவிகள் 162 போ் அளித்த புகாா்களை மாநில மகளிா் ஆணையம், சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஹரிபத்மன் மீதான பாலியல் புகாா் தொடா்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் போலீஸாா் நேரடியாக சென்று விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனா். இவ்வழக்கின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, பேராசிரியா் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 250 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விரைந்து நடத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.