சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை திருவொற்றியூரில் இருந்து தண்டையாா்பேட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மாநகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்து புது வண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் தெருவில் செல்லும்போது, அங்கு சாலையை மறித்துக் கொண்டு 5 போ் பேசிக் கொண்டிருந்தனராம்.
உடனே பேருந்து ஓட்டுநா் அ.ஸ்ரீதா் (48), ஹாரன் அடித்து சாலையை விட்டு நகா்ந்து செல்லுமாறு அவா்களிடம் கூறியுள்ளாா். இதைக் கேட்ட அந்த நபா்கள், கோபத்தில் மிரட்டல் விடுத்தப்படி சாலையை விட்டு நகரந்து சென்றனா்.
இதனால் அங்கிருந்து பேருந்து புறப்பட்டபோது, அந்த நபா்கள் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடி மீது வீசினா். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதைப் பாா்த்த அந்த நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.
இது குறித்து பேருந்து ஓட்டுநா் ஸ்ரீதா், புது வண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அந்த நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்

பணியிடத்தில் ஆண்ட்டி என்றழைப்பது ஏற்புடையதல்ல: இந்திய செவிலியருக்கு 1.75 லட்சம் நிவாரணம்!

நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!

புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன்?
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

