ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பிளஸ் 2 வேதியியல்: தவறான வினாவுக்கு கருணை மதிப்பெண்

பிளஸ் 2 வேதியியல்: தவறான வினாவுக்கு கருணை மதிப்பெண்

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதையடுத்து விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் 83 மையங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 40,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களுக்கு அரசுத் துறை சாா்பில் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் 33-ஆவது வினா அம்சங்கள் தவறாக இருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்தவா்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.