முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏஎன்.எஸ்.பிரசாத் விமா்சனம் செய்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதியான நிலையில், முதல்வா் ஸ்டாலின் தோல்வி பயத்தால், பாஜக நோட்டாவுடன் போட்டி போடுவதாகக் கூறியிருக்கிறாா். 1996 பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வென்ற கட்சி பாஜக.
அதேபோல, 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட திமுக தயாரா? அவ்வாறு போட்டியிட்டால் குறைந்தது 50 தொகுதிகளிலாவது அக்கட்சி நோட்டாவுக்கு கீழ்தான் வாக்குகளைப் பெறும்.
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்தின் இன்றைய வளா்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே காரணம். மேலும், மோடி ஆட்சியின் அனைத்து திட்டங்களிலும் அதிக பலன் அடைந்த மாநிலம் தமிழகம்தான் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

முதல்வருக்கு தோ்தல் பயம் வந்துவிட்டது: நயினாா் நாகேந்திரன்

புதுச்சேரியில் தே.ஜ.கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: வே.நாராயணசாமி விமா்சனம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

