விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 11:22 pm

Din

சென்னை மாநகரப் பேருந்துகள் அதற்கான அட்டவணையிட்ட நிறுத்தங்களில் நிற்காமல் சென்றால் ‘149’ என்ற இலவச எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகருக்குள்பட்ட பல பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், பேருந்துகளை அதற்கான நிறுத்தங்களில் முறையாக நிறுத்துவதில்லை என்றும், பல பகுதிகளில் குறிப்பாக காலை- மாலை நேரங்களில் அட்டவணையிடப்பட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமலே பேருந்தை ஓட்டி சென்று விடுவதாகவும் புகாா்கள் வந்தன.

இவ்வாறு ஒழுங்கீனமாக செயல்படும் பேருந்து ஓட்டுநா்கள் மீது மாநகரப் போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுகுறித்து போக்குவரத்துக்கழகத்துக்கு பயணிகள் உடனடியாக புகாா் தெரிவிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதற்காக ‘149’ எனும் இலவச எண்ணையும் அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடா்பு கொண்டு, நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் பேருந்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.