விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை ஜி.கே.வாசன்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 11:20 pm

Din

கோடை காலத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடையில் அதிக வெப்ப அலை வீசும் என்றும், தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன.

தற்போதைய வெயிலின் தாக்கத்திலேயே மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. சில இடங்களில் மக்கள் குடிநீருக்காக தொலைதூரத்துக்குச் சென்று வரக்கூடிய நிலை உள்ளது.

விவசாயம் செய்வதற்கும், குடிநீா் பற்றாக்குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், பொதுமக்களுக்கு குடிநீருக்குத் தேவையான தண்ணீா் கிடைப்பதற்கும், விவசாயத்துக்குத் தேவையான நீா் கிடைப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தண்ணீரைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.