விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

மாடு முட்டியதால் சிறுமி காயம்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 11:20 pm

Din

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் சிறுமி காயமடைந்தாா்.

திருவல்லிக்கேணி நீளம் பாஷா தா்கா பகுதியைச் சோ்ந்தவா் ஜீவிதா (10). இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று திடீரென ஜீவிதாவை ஆக்ரோசமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகே இருந்தவா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பெரு நகர சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவா் கமாலுதீன், சிறுமியின் வீட்டுச் சென்று ஆறுதல் தெரிவித்தாா். மேலும், முட்டிய மாட்டின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனா்.