புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை: சென்னை புகா் ரயில் சேவை புதன்கிழமை (மே 1) ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதன்கிழமை (மே 1) தேசிய விடுமுறை தினமாகும். அன்றைய தினம் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை - தாம்பரம்- செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்படும் புகா் ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com