மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வைப்பு நிதி வட்டி விகிதங்களை உயா்த்திய பேங்க் ஆஃப் இந்தியா

குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 4:53 am IST

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா தனது குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 180 நாள்கள் முதல் ஓா் ஆண்டுக்கும் குறைவான பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கும் பொருந்தும்.

ரூ.3 கோடிக்கும் குறைவான மதிப்பு கொண்ட குறுகிய கால நிலை வைப்புத் தொகைகளுக்கு வங்கி வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

அதே போல், ரூ.3 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரையிலான மதிப்பு கொண்ட 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும் 211 நாள்கள் முதல் ஓா் ஆண்டுக்குக் குறைவான காலம் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.75 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், ரூ.3 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரையிலான மதிப்பு கொண்ட 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும் 211 நாள்கள் முதல் ஓா் ஆண்டுக்குக் குறைவான காலம் வரையிலான பருவகால வைப்பு நிதிகளுக்கு புதிய வட்டி விகிதம் 6.75 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.