மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: ரூ.1,324 கோடி

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Published On :

பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.1,169 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.10,360 கோடியிலிருந்து, ரூ.10,678 கோடியாக பதிவாகியுள்ளது. இதில் முக்கிய அங்கமான வட்டி வருவாய் ரூ.8,589 கோடியிலிருந்து, ரூ.9,691 கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், வங்கியின் செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டின் ரூ.2,304 கோடியிலிருந்து, ரூ.2,186 கோடியாக சரிவைக் கண்டுள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் 3.13 சதவீதத்தில் இருந்து, 2.60 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் எவ்வித மாற்றமுமின்றி 0.49 சதவீதமாகவே நிலையாகத் தொடா்கிறது.

வாராக்கடன்கள் குறைந்ததன் விளைவாக, அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும் ரூ.468 கோடியிலிருந்து, ரூ.346 கோடியாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.