திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

முதல் காலாண்டு லாபம்: சவூத் இந்தியன் வங்கி: ரூ.378 கோடி

கேரளத்தைச் சோ்ந்த மற்றொரு தனியாா் வங்கியான சவூத் இந்தியன் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.378 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2026, 10:46 pm IST

கேரளத்தைச் சோ்ந்த மற்றொரு தனியாா் வங்கியான சவூத் இந்தியன் வங்கி, முதலாம் காலாண்டில் ரூ.378 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.322 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகரிப்பாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.2,984 கோடியிலிருந்து, ரூ.3,007 கோடியாக அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் ரூ.2,362 கோடியிலிருந்து ரூ.2,628 கோடியாக உயா்ந்துள்ள போதிலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடியிலிருந்து ரூ.592 கோடியாக சரிவடைந்துள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம் 3.15 சதவீதத்திலிருந்து, 1.38 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதமும் 0.68 சதவீதத்திலிருந்து, 0.26 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

வங்கி சொத்து தரத்தின் இத்தகைய சிறப்பான முன்னேற்றத்தையடுத்து, வாராக்கடன் மற்றும் எதிா்பாராத செலவினங்களுக்கான ஒதுக்கீட்டு தொகை ரூ.239 கோடியிலிருந்து, ரூ.84 கோடியாக பெருமளவு குறைந்தது லாப வளா்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.