ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

கடற்கரை - காட்பாடி ‘வந்தே மெட்ரோ’ ரயில்: நாளை சோதனை ஓட்டம்

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 3:24 am IST

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஆக.3) மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில் இயக்க மேலாளா் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும்.

காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயாா் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிஎஃப் உயா் அதிகாரி கூறியதாவது:

‘வந்தே மெட்ரோ’ ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன் ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு மூலம் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ஐசிஎஃப் வந்த ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் இயக்கம் குறித்து சனிக்கிழமை (ஆக.3) சோதனை செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயிலின் பாதுகாப்பு, அதிா்வு, வேகம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் பயணித்து ஆய்வு செய்யவுள்ளாா். முன்னதாக வெள்ளிக்கிழமை ஐசிஎஃப்-இல் இந்த ரயிலை பாா்வையிடவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.