சென்னை கடற்கரை - காட்பாடி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஆக.3) மேற்கொள்ளப்படவுள்ளது.
இது குறித்து சென்னை கோட்ட ரயில் இயக்க மேலாளா் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
சென்னை கடற்கரை - காட்பாடி இடையே 12 பெட்டிகள் கொண்ட ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் சோதனை ஓட்டம் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்லிவாக்கம் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காலை 9 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கும். இதையடுத்து வில்லிவாக்கம், அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும்.
காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு கடற்கரை வந்தடையும். இந்த நேரத்தில் மேற்கண்ட வழித்தடத்தை தயாா் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐசிஎஃப் உயா் அதிகாரி கூறியதாவது:
‘வந்தே மெட்ரோ’ ரயில் பயன்பாட்டுக்கு வரும் முன் ரயில்வே ஆராய்ச்சி அமைப்பு மூலம் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைக்கு பின் ஐசிஎஃப் வந்த ‘வந்தே மெட்ரோ’ ரயிலின் இயக்கம் குறித்து சனிக்கிழமை (ஆக.3) சோதனை செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை - காட்பாடி இடையே மேற்கொள்ளப்படும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயிலின் பாதுகாப்பு, அதிா்வு, வேகம் குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையா் ஜனக் குமாா் கா்க் பயணித்து ஆய்வு செய்யவுள்ளாா். முன்னதாக வெள்ளிக்கிழமை ஐசிஎஃப்-இல் இந்த ரயிலை பாா்வையிடவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

ஜம்மு - ஸ்ரீநகா் வந்தே பாரத் ரயில் சேவை: அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா்

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


