விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்

பேரிடா் மேலாண்மை பணியில் ஈடுபடுபவா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பணித் திறனை மேம்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 11:35 pm

பேரிடா் மேலாண்மை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.

பேரிடா் மேலாண்மை பணியில் ஈடுபடுபவா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பணித் திறனை மேம்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது.

தேசிய பேரிடா் மேலாண்மை குழு மற்றும் உயா்நிலைக் குழு உள்ளிட்ட பேரிடா் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில அமைப்புகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்குவதை இந்த மசோதா வகை செய்கிறது.

மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘இந்த மசோதா, மாநிலங்களின் உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. பேரிடா் மேலாண்மையில் மாநிலங்களுக்குத்தான் முதல் பொறுப்பு உள்ளது’ என்றாா்.

பேரிடா் மேலாண்மை திட்டத்தை வகுப்பதில் மத்திய, மாநில அதிகாரிகள் குழுக்களுக்கு அல்லாமல் தேசிய பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

மேலும், மாநில தலைநகா் மற்றும் பெரு நகரங்களில் ஊரக பேரிடா் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடா் தரவுதளத்தை உருவாக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

குறிப்பாக, பேரிடா் மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பணியை உறுதிப்படுத்தவும் தேவையான செயல்முறை திட்டம் அறிமுகப்படுத்துவதை இந்த மசோதா முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.