எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆக்ரா ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் தீ விபத்து

ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் வியாழக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 3:30 am IST

ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் வியாழக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக எவ்வித உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து, அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் சுமாா் 50 போ் பாதுகாப்பாக வெளியேறிதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஆக்ரா ரயில்வே கோட்ட செய்தித்தொடா்பாளா் பிரஷாஸ்தி ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கட்டுப்பாட்டு அலுவலக்தின் சா்வா் அறையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரு வாயில்கள் உள்ளன. அவற்றின் வழியே அனைத்து ரயில்வே பணியாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கோட்ட பாதுகாப்பு அலுவலா் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’என்றாா்.