பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீா் சேமிப்பு: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

தண்ணீா் சேமிப்பு, பாதுகாப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:20 pm

Din

தண்ணீா் சேமிப்பு, பாதுகாப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாறுபாடு, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் நீா் மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு அது தொடா்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாடங்கள், பாடத்திட்டங்களில் யுஜிசி புகுத்தியுள்ளது.

அதேபோன்று நிலத்தடி நீா் மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, மழை நீா் சேமிப்பு குறித்து பொதுமக்கள், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. எனவே நீா் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை உயா்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.