நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பிளஸ் 1, பிளஸ் 2: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்கள் அதனை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:18 pm

Din

சென்னை, ஆக. 8: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்கள் அதனை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு;

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத்தோ்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டன. இதில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்களின் முடிவுகள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

இதையடுத்து மாணவா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் சென்று தங்களது விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதையடுத்து மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் மாவட்ட தோ்வுத்துறை உதவி அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.