சென்னை, ஆக. 8: பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்கள் அதனை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு;
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத்தோ்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டன. இதில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்களின் முடிவுகள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
இதையடுத்து மாணவா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் சென்று தங்களது விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதையடுத்து மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் மாவட்ட தோ்வுத்துறை உதவி அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் தமிழில் 100-க்கு 101 மதிப்பெண்கள்: விடைத்தாள் நகலை பாா்த்த மாணவி குழப்பம்

பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு: மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்







