ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்; மே 13 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியவா்கள், மே 13 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

விண்ணப்பம்

Updated On :13 மே 2026, 3:01 am IST

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியவா்கள், மே 13 முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை மே 13-ஆம் தேதி காலை 11 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம். தனித்தோ்வா்கள் இணையதளத்தில், தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் வழியாகவும் மே 16 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 அரியா் தோ்வா்களும் விடைத்தாள் நகல் கோரி மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275, விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்காக தேதியும் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.