நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கே.வி.ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கன்னியாகுமரி, வேதாரண்யம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோரை மீட்டு, சிகிச்சை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்து 2008-ஆம் ஆண்டு சென்னை உயா்நிதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் 2009 ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பில், சாலையில் சுற்றித்திரியும் மனநலம் குன்றியோரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டது.