நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் சாவு

Updated On :9 ஆகஸ்ட் 2024, 3:47 am IST

சென்னை,ஆக.8: சென்னை மேற்கு மாம்பலத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவா (27). திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். தேவா, புதன்கிழமை இரவு மதுபோதையில் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு மாடிப்படி வழியாக நடந்து சென்றாா். மூன்றாவது மாடியில் பால்கனியில் செல்லும்போது, திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்தாா்.

விபத்தில் பலத்தக் காயமடைந்த தேவாவை அங்கிருந்தவா்கள் மீட்டு,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு , சிறிது நேரத்தில் அவா் இறந்தாா். இது குறித்து அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.