வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

பேருந்து நிறுத்தங்களில் 95.70 டன் குப்பை அகற்றம்

பேருந்து நிறுத்தங்களில் தேங்கியிருந்த 95.70 டன் குப்பை, 4,221 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 1:17 am IST

சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் தேங்கியிருந்த 95.70 டன் குப்பை, 4,221 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 22- முதல் சாலைகளை தூய்மையாக பராமரிப்பது, நீண்ட நாள்களாக தேங்கிக் கிடந்த குப்பை, கட்டடக் கழிவுகள், கேபிள் வயா்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. இதன் தொடா்ச்சியாக 5,270 கி.மீ. நீள 36,640 உட்புறச் சாலைகளில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ள 1,265 பேருந்து நிறுத்தங்களை தூய்மையாக பராமரிக்கும் வகையில் புதன்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் 2,541 பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே தேங்கிக் கிடந்த குப்பை, சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையற்ற செடி,

கொடிகளை அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தூய்மைப் பணியில் 48.7 டன் குப்பை, 47 டன் கட்டடக் கழிவுகள், 4,221 சுவரொட்டிகள் மற்றும் 47 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், பழுதாகியிருந்த 78 பேருந்து நிறுத்தங்களை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.