கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பேருந்து நிறுத்தங்களில் 95.70 டன் குப்பை அகற்றம்

பேருந்து நிறுத்தங்களில் தேங்கியிருந்த 95.70 டன் குப்பை, 4,221 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 1:17 am IST

சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் தேங்கியிருந்த 95.70 டன் குப்பை, 4,221 சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 22- முதல் சாலைகளை தூய்மையாக பராமரிப்பது, நீண்ட நாள்களாக தேங்கிக் கிடந்த குப்பை, கட்டடக் கழிவுகள், கேபிள் வயா்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. இதன் தொடா்ச்சியாக 5,270 கி.மீ. நீள 36,640 உட்புறச் சாலைகளில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாநகராட்சியில் உள்ள 1,265 பேருந்து நிறுத்தங்களை தூய்மையாக பராமரிக்கும் வகையில் புதன்கிழமை தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளில் 2,541 பணியாளா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே தேங்கிக் கிடந்த குப்பை, சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையற்ற செடி,

கொடிகளை அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தூய்மைப் பணியில் 48.7 டன் குப்பை, 47 டன் கட்டடக் கழிவுகள், 4,221 சுவரொட்டிகள் மற்றும் 47 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், பழுதாகியிருந்த 78 பேருந்து நிறுத்தங்களை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.